ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள காவல் நிலையம் அருகே ஒரு சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலால் 14 குடியிருப்புகள் சேதமடைந்தன. இது குறித்து ஆப்கன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.