ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,270 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது,
அதன்படி, புதிதாக 9,270 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 48,14,558 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 392 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,10,520 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 3,208 பேர் பாதிக்கப்பட்டுளள்னர். இதையடுத்து அங்கு இதுவரை 1,09,6,019 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொற்று பாதித்த 4,436,583 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
ரஷியாவில் இதுவரை 129.5 மில்லியன் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.