வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ரஷியாவில் புதிதாக 40,402 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 1,155 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,155 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
russia
Updated On :1 நவம்பர் 2021, 11:50 am

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,155 பேர் உயிரிழந்துள்ளனர். 

இத்துடன், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின ஒட்டுமொத்த எண்ணிக்கை 239,693 ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர புதிதாக 40,402 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 85,54,192-ஆக உயா்ந்துள்ளது. 

நேற்று 23,187 உள்பட இதுவரை 73,81,726 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது 9,32,773 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கரோனா பலி எண்ணிக்கை அடிக்கடி புதிய உச்சங்களை தொட்டு வரும் சூழலில், அங்கு நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.