பவேரியா மாகாண நகரங்களான ரிகென்ஸ்பா்க் மற்றும் நியூரம்பா்குக்கு இடையே சனிக்கிழமை சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் நிகழ்த்தப்பட்ட சரமாரி கத்திக்குத்து தாக்குதலில் பலா் காயமடைந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். ரயிலில் இருந்த சுமாா் 200 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.