தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தென்கொரிய முன்னாள் அதிபர் மாரடைப்பால் மறைவு

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

News image

சுன் டூ-ஹ்வான்

Updated On :23 நவம்பர் 2021, 10:10 am

தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபரான சுன் டூ-ஹ்வான் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தென்கொரியாவில் 1979ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் சுன் டூ-ஹ்வான். ராணுவ வீரரான இவர் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரோஹ் வெற்றி பெற்று தென்கொரிய அதிபரானார். 

இந்நிலையில் 90 வயதான சுன் டூ-ஹ்வான் அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் ரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக தனது வீட்டில் மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.