மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெருக்கடியில் பிரிட்டன்; உறுதிமொழி அளித்த போரிஸ் ஜான்சன்

இந்த வாரம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டை பயன்படுத்தி 2019ஆம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் கவனம் செலுத்த முடிவெடுத்திருந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

News image
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
Updated On :3 அக்டோபர் 2021, 7:59 am

DIN

கரோனாக்கு பிந்தைய உலகம் பெரும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரோனாவுக்கு பிந்தைய பிரிட்டனை மாற்றிமைக்க 'மிகப் பெரிய, துணிச்சலான' முடிவுகளை எடுக்கவிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

எரிபொருள், எரிவாயு மற்றும் கிறிஸ்துமஸ் உணவு நெருக்கடி ஆகிய விவகாரங்களால் பிரிட்டன் பல்வேறு இடையூறுகளை சந்தித்துவருகிறது. பிராந்திய சமத்துவமின்மை, குற்றங்கள், சமூக பிரச்னைகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தப்படும் என பிரிட்டனர் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு இந்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பயன்படுத்தி 2019ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் கவனம் செலுத்த போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக போரிஸ் ஜான்சன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

முன்னதாக, பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தான போது, பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சுதந்திரத்தை நாடு பெற்றுள்ளதாக ஜான்சன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. பெட்ரோல் மொத்த விற்பனை விலைகள் உயர்ந்துவரும் நிலையில், எரிவாயு நிறுவனங்கள் அதை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டுவருகின்றன.

கிறிஸ்துமஸ் விலை மாற்றத்தின் காரணமாக பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுவிடுமோ என சில்லறை விற்பனையாளர்கள் அச்சப்படுகின்றனர். இதற்கு மத்தியில், கார்களுக்கு பெட்ரோல் போட முடியாமல் தவித்துவருவது மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மான்செஸ்டர் நகரில் கட்சி மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போதைய நெருக்கடிகளைக் குறிப்பிடாமல் ஜான்சன் தவிர்த்துவிட்டார். மாறாக, மக்களின் முன்னுரிமைகளில் முக்கியத்துவம் அளித்து சாதனை படைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். "சமூக அக்கறை, வேலைவாய்ப்பு, காலநிலை மாற்றம், குற்றங்களை களைவது போன்று மக்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றனரோ அதில் மிகப் பெரிய துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறோம்" என்றும் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.