பெரு நாட்டின் உராஸ்குயில் இன்று (அக்14) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 45 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது
மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக நேற்று(அக்-13) ஆம் தேதி வடக்கு பெருவின் பகுதியில் 4.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.