காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரேசிலில் குறையும் கரோனா பாதிப்பு!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 373 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :21 அக்டோபர் 2021, 6:24 am

DIN

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 373 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் 2 ஆவது இடத்திலும் கரோனா பாதிப்பில் 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில்.

கடந்த சில வாரங்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்து இன்று வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 373 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 6,04,228 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 15,609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,16,80,488 ஆக அதிகரித்துள்ளது. 2.08 கோடி பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று கரோனா பாதிப்பு 12,969 மற்றும் பலி 390 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.