தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உலகம் முழுவதும் 688 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 688 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

News image
உலகம் முழுவதும் 688 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :27 அக்டோபர் 2021, 9:26 am

DIN

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் இதுவரை 688 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க இதுவரை  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.45 கோடியாக உயர்ந்துள்ளது. 

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.56 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 7.40 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.4 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.5 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(அக்-26) நிலவரப்படி 688 கோடி கரோனா தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 292 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 55.40 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர் . 

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 224.9 கோடி

இந்தியா - 103.19 கோடி

ஐரோப்பா ஒன்றியம் - 69 கோடி

அமெரிக்கா - 48.6 கோடி 

பிரேசில் - 24.07 கோடி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.