பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்ட ரஷிய அதிபா் புதின்

ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால், அதிபர் விளாதீமிர் புதின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

Updated On :14 செப்டம்பர் 2021, 10:02 am

ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால், அதிபர் விளாதீமிர் புதின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த வார இறுதியில் தஜிகிஸ்தானுக்கு அதிபர் புதின் மேற்கொள்ள இருந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில்,

“தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரக்மானை தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பயணம் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவித்தார்.” 

ஏற்கனவே ரஷிய தயாரிப்பு கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி இரண்டு தவணையும் ரஷிய அதிபர் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.