கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உணவின்றி பசியால் வாடும் ஆப்கன் மக்கள்: ஐ.நா. கவலை

தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் சென்றபிறகு அங்குள்ள பெரும்பாலான மக்கள் உணவின்றி பசி, பட்டினியில் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளார். 

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 10:27 am

DIN

தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் சென்றபிறகு அங்குள்ள பெரும்பாலான மக்கள் உணவின்றி பசி, பட்டினியில் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளார். 

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதுகுறித்து கூறுகையில், 'ஐ.நா.வின் மனிதநேய விமான சேவை ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களுக்கும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக சாலைவழி சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், உலக உணவு திட்ட கணக்கெடுப்பில் ஆப்கானிஸ்தானில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே தினமும் போதுமான அளவு உணவு கிடைக்கிறது. 

வேலை இழப்பு, பணப் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயர்வு ஆகியவை ஆப்கானிஸ்தானில் மக்களை உணவில்லா நிலைக்குத் தள்ளியுள்ளது. 

செப்டம்பர் 13 வரை, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய $1.2 பில்லியனுக்கும்(தோராயமாக ரூ. 8,847 கோடி) அதிகமான நன்கொடை வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதியில் தேவைப்படும் $606 மில்லியனில்(ரூ. 4,467 கோடி) 20 சதவிகிதம், அதாவது $ 121 மில்லியன்(ரூ.884 கோடி) மட்டுமே பெறப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்குத் தேவானவற்றை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றால் இந்த நிதி அவசியம். 

பொருள்கள், மக்களுக்கு சிகிச்சைகள் என பல்வேறு வழிகளிலும் அங்குள்ள மக்களுக்கு உதவி கிடைக்கிறது. எனினும், பெரும்பாலான ஆப்கன் மக்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.