டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்திய, அமெரிக்க உறவு புதிய உச்சத்தை தொடும்: பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டு நாடுகள்; ஒரே மாதிரியான விழுமியங்களையும் புவிசார் அரசியல் நலன்களையும் கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
மோடியுடன் கமலா ஹாரிஸ் சந்திப்பு
Updated On :28 ஜனவரி 2024, 4:13 am

DIN

அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸை முதல்முறையாக வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். வியூக ரீதியான இருநாட்டு உறவின் முக்கியத்துவம் குறித்தும் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்தும் இருவரும் உரையாடினர்.

பின்னர், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி, "இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டு நாடுகள். ஒரே மாதிரியான விழுமியங்களையும் புவிசார் அரசியல் நலன்களையும் கொண்டுள்ளோம்" என்றார். 

அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகள் என்பதை மேற்கோள் காட்டிய மோடி, இரு நாடுகளும் ஒரே மாதிரியான விழுமியங்களை பகிர்ந்து கொள்வதால் அமெரிக்கா, இந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதாக குறிப்பிட்டார்.

கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த மோடி, "அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் இருநாட்டு உறவு புதிய உச்சத்தை தொடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. உலகின் வாழும் பல மக்களுக்கு ஹாரிஸ் உத்வேகம் அளிக்கிறார்" என புகழாரம் சூட்டினார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "உலகம் கடும் சவால்களை சந்தித்த சமயத்தில், பைடனும், கமலாவும் அதிபராகவும் துணை அதிபராகவும் பதவியேற்று கொண்டனர். குறுகிய காலத்தில் கரோனா, பருவநிலை மாற்றம், குவாட் போன்றவற்றில் இருவரும் சாதனை படைத்திருக்கிறார்கள். 

துணை அதிபராக கமலா பொறுப்பேற்ற பிறகு அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடுமையான கரோனா அலைக்கு எதிராக இந்தியா போரிட்ட சமயத்தில் நாங்கள் இருவரும் பேசினோம். அச்சமயத்தில், எங்களுக்கு ஆதரவு அளித்து அன்பாக நடந்து கொண்டதை நினைவு கூற விரும்புகிறேன்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.