பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் பலியானதை அடுத்து கரோனா பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 49,506 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் புதிதாக 3,884 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 10,75,504 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 84,427 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக 86 பேர் உள்பட மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,004 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று 2,669 பேர் உள்பட இதுவரை 9,67,073 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தானில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 4,01,790 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபில் 3,65,824 பேரும், கைபர் பதுன்க்வாவில் 1,49,056 பேரும், இஸ்லாமபாத்தில் 91,217 பேரும், பலூசிஸ்தானில் 31,234 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.