லண்டன் : 5 பேரைக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த கொலையாளி

இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 
லண்டன் : 5 பேரைக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த கொலையாளி
லண்டன் : 5 பேரைக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த கொலையாளி

இங்கிலாந்து நாட்டின் பிளைமவுத் மாகாணத்தைச் சேர்ந்த கீஹாம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் அடையாளம் தெரியாத நபரால் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

இதை எதிர்பார்க்காத பொதுமக்களில் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இருப்பினும் தாக்குதலில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலையாளியைப் பிடிக்கும் நோக்குடன் சுற்றிவளைத்த காவல்துறைக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொலையாளியும் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களில் 10 வயது சிறுவனும் அடக்கம் என்பதால்  சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பிளைமவுத் மாகாண அமைச்சர் ஜானி மெர்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'கொலைக்கான காரணத்தை தேடி வருகிறோம். ஆனால் இது தீவிரவாத தாக்குதல் இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com