மலேசியாவில் பிரதமர் முகைதீன் யாசின் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில் முன்னாள் துணை பிரதமரான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் புதிய பிரதமராக பஹவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பின் ஆதரவில் பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சி செய்து வந்தார். இந்நிலையில் அக்கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகைதீன் யாசினுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்ற நிலையில் அவர் பிரதமராக தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையும் படிக்க | 'என்னுடைய ஆப்கன் சகோதரிகளை நினைத்துப் பயப்படுகிறேன்' - மலாலா
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட முகைதீன் யாசின் போதிய ஆதரவின்மையால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையும் படிக்க | அஷ்ரஃப் கனி முக்கியத்துவத்தை இழந்துவிட்டார்: அமெரிக்கா கருத்து
இதனைத் தொடர்ந்து முன்னாள் துணை பிரதமரான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 61 வயதான இஸ்மாயில் சாப்ரி மொத்தம் உள்ள 222 உறுப்பினர்களில் 114 பேரின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில் விரைவில் ஆட்சியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.