தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தொடரும் தலிபான்களின் கொடூரம்: செய்தியாளர் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் செய்தியாளர் ஒருவரை தலிபான்கள் பயங்கரமாக தாக்கியுள்ளனர்

News image

கோப்புப்படம்

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:16 am

ஆப்கானிஸ்தானில் செய்தியாளர் ஒருவரை தலிபான்கள் பயங்கரமாக தாக்கியுள்ளனர்

ஆப்கானிஸ்தானின் முதல் சுதந்திர செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளரை தலிபான்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. இப்படுகொலை சம்பவம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்றதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

காபூலில் உள்ள ஹாஜி யாகூபில் நிலவும் வறுமை, வேலையின்மை குறித்த செய்தியை சேகரிப்பதற்காக செயத்தியாளர் சீயர் யாத் கான், அவரின் ஒளிப்பதிவாளர் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இச்செய்தியை குறிப்பிட்ட அச்செய்தியாளரே மறுத்துள்ளார்.

இதுகுறித்து சீயர் யாத் கான் ட்விட்டர் பக்கத்தில், "காபூல் நியூ சிட்டியில் செய்தி சேகரித்தக் கொண்டிருந்தபோது தலிபான்கள் என்னை தாக்கினர். கேமராக்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், செல்போன் ஆகியவற்றை அவர்கள் எடுத்து சென்றுவிட்டனர். நான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சிலர் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளனர். லாண்ட் குருசர் வாகத்தில் ஆயுதங்களுடன் வந்த அவர்கள், துப்பூாக்கு முனையில் வைத்து என்னை தாக்கினர்" என பதிவிட்டுள்ளார்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.