

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்றின் தாக்கம் குறையாத சூழலில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரானின் பரவல் தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக நேற்று(டிச.1) கரோனாவால் 4,373-லிருந்து 8,561 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் , நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்த பாதிப்புகள் நவம்பர் இறுதியில் அதிகரித்திருக்கிறது. இதுவரை கரோனாவால் 28.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருகிறார்கள். 87,900 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
தற்போது ஒமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்கா , ஜப்பான் , இத்தாலி , ஜெர்மனி , சௌதி போன்ற 25 நாடுகளில் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.