நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

ஒமைக்ரான் 70 மடங்கு வேகத்தில் பரவும்: ஆய்வில் தகவல்

டெல்டா வகை கரோனாவைவிட ஒமைக்ரான் வகை 70 மடங்கு அதிக வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:12 am IST

டெல்டா வகை கரோனாவைவிட ஒமைக்ரான் வகை 70 மடங்கு அதிக வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், டெல்டாவைவிட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது:

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கரோனாக்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், டெல்டாவைவிட 70 மடங்கு வேகத்தில் ஒமைக்ரான் மற்றவா்களுக்குத் தொற்றி, பல்கிப் பெருகுவது தெரிய வந்தது.

இருந்தாலும், அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமைக்ரான் டெல்டாவைவிட மிகக் குறைவாகவே நுரையீரலைத் தாக்குவதும் ஆய்வில் தெரியவந்தது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

இந்தோனேசியாவில் முதல்முறை: இதற்கிடையே இந்தோனேசியாவில் முதல்முறையாக ஒமைக்ரான் வகைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளா் ஒருவருக்கு அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் உறதிசெய்யப்பட்டுள்ளது.

தொற்றுநோய் புள்ளிவிவரங்களை அளிப்பதற்கான ஜிஐஎஸ்ஏஐடி-யின் புள்ளவிவரத்தின் அடிப்படிப்படையில், வியாழக்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதும் 6,951 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.