மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.
வடக்கு மியான்மர் நாட்டில் மாணிக்கக் கல்லை எடுக்கும் சுரங்கத்தில் இன்று 70-க்கும் மேற்பட்டவர்கள் மாணிக்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அதில் சிக்கினர்.
இதுகுறித்து தெரிவித்த மீட்புப் குழுவினர், மாயமானவர்களில் ஒருவர் பலியானதாகவும் 70-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.