மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு: 70 பேர் மாயம், ஒருவர் பலி

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.

வடக்கு மியான்மர் நாட்டில் மாணிக்கக் கல்லை எடுக்கும் சுரங்கத்தில் இன்று 70-க்கும் மேற்பட்டவர்கள் மாணிக்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அதில் சிக்கினர்.

இதுகுறித்து தெரிவித்த மீட்புப் குழுவினர், மாயமானவர்களில்  ஒருவர் பலியானதாகவும் 70-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com