பிரிட்டனில் ஒமைக்ரான் வகை கரோனா பரவி வரும் நிலையில், கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,06,112 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, முதல்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.
இத்துடன் 1,17,13,654 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,48,038 பேர் கரோனாவால் பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், 60,000-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.