மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இந்தியர்களுக்கு கரோனா தளர்வுகளை அறிவித்தது சிங்கப்பூர்

இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்தியர்கள் சிங்கப்பூர் பயணித்தால் இனி தனிமைப்படுத்தல் கிடையாது என சிங்கப்பூர் அரசு தளர்வுகளை அறிவித்திருக்கிறது.

News image
ஏர் இந்தியா விமானம் (கோப்புப்படம்)
Updated On :19 நவம்பர் 2021, 6:45 am

DIN

இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்தியர்கள் சிங்கப்பூர் பயணித்தால் இனி தனிமைப்படுத்தல் கிடையாது என சிங்கப்பூர் அரசு தளர்வுகளை அறிவித்திருக்கிறது.

கரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தொற்றின் தீவிரம் குறைந்து வருவதாலும் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் சில நாடுகள் பயணிகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அண்டை நாடான சிங்கப்பூரில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என புதிய தளர்வை அறிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தளர்வு வருகிற நவ.29 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. மேலும் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.