பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று(அக்-3) ஞாயிற்றுக்கிழமை கராச்சியிலிருந்து சாக்வால் மாவட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் பாலத்திலிருந்து தடுப்பை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 5 பயணிகள் பலியானதோடு இன்று 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். மேலும் படுகாயமடைந்த 28 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாலைகள் மோசமாக இருப்பதே விபத்திற்கான காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.