இங்கிலாந்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்தில் இதுவரை 75.05 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
இதையும் படிக்க | 184 நாள்களுக்குப் பின்.. கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது
நேற்று (செப்-20) நிலவரப்படி புதிதாக 22,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 75.05 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,35,553 ஆகவும் பதிவாகியிருக்கிறது.
மேலும் இங்கிலாந்தில் 9.16 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 4.37 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள் எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.