டெல்டா வகை உருமாறிய கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடையை செப்டம்பர் 26 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.
இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைக்கான தடையை கனடா செப். 21-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. இந்நிலையில் கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், அதனை செப்டம்பர் 26 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் பிற நாடுகளின் வழியாக கனடா வரும் இந்தியப் பயணிகள் கரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுத்த அமெரிக்க உணவு விடுதி
டெல்டா வகை கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இந்திய விமானங்களுக்கு கனடா தடை விதித்த நிலையில், தற்போது 6வது முறையாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.