கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கரோனா பாதித்த பச்சிளம் குழந்தைகளை தனிமைப்படுத்தும் சீனா

தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்திருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சீனத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

News image
கரோனா பாதித்த பச்சிளம் குழந்தைகளை தனிமைப்படுத்தும் சீனா
Updated On :2 ஏப்ரல் 2022, 10:20 am

DIN


ஷாங்காய்: தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்திருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சீனத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சீனத்தின் ஷாங்காய் மாகாணத்தில், குழந்தைக்கும் தாய்க்கும் கரோனா உறுதி செய்யப்பட்டாலும், குழந்தைகள் தனியாக தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் வரை குழந்தைகளுக்கான கரோனா மையங்களில் வைக்கப்படுவதாகவும், பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

Story image

சீனாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும், வணிக நகரமாகவும் விளங்கும் ஷாங்காயில், குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

எனினும், இந்த தகவல் எங்கிருந்தும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், சீனாவில் இயங்கும் சில சமூக வலைத்தளங்களில், குழந்தைகள் தனிமைப்படுத்தும் மையங்களில் அழுதுகொண்டே இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. ஒரு படுக்கையில் தலா மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் பிறந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு அறையில் சுமார் எட்டு குழந்தைகள் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஒரு பராமரிப்பாளர் கூட இல்லாத புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

பிரித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தையைப் பற்றி எந்த தகவலும் பெற்றோருக்கு கிடைப்பதில்லை. குழந்தை அனுமதிக்கப்படும்போது குழந்தை நன்றாக உள்ளது என்ற குறுந்தகவலைத் தவிர.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.