கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் முற்றுகையிடப்பட்ட நகரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கிவ் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 6,226 பேர் உக்ரைனிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில், ரஷியப் படைகள் நடத்திவரும் இடைவிடாத தாக்குதல் மற்றும் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மரியுபோலில் 3,071 பேர் வெளியேறியுள்ளனர்.
மேலும், ஜபோரிஜ்ஜியா மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளிலும் மக்கள் வெளியேறியுள்ளனர்.
இருப்பினும், ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மரியுபோலில் சிக்கித் தவிக்கின்றனர், அங்குக் கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான ரஷிய ஷெல் தாக்குதலினால், உணவு, நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!







