ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

முஸ்கானுக்கு கவிதை: கர்நாடக ஹிஜாப் தடை குறித்து அல்-காய்தா தலைவர் பேச்சு

உலக பயங்கரவாத அமைப்பான அல்-கய்தாவின் தலைவர், கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து பேசும் விடியோ வெளியாகியுள்ளது.

News image

முஸ்கானுக்கு கவிதை: கர்நாடக ஹிஜாப் தடை குறித்து அல்-காய்தா தலைவர் பேச்சு

Updated On :6 ஏப்ரல் 2022, 5:45 pm IST


புது தில்லி: உலக பயங்கரவாத அமைப்பான அல்-கய்தாவின் தலைவர், கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து பேசும் விடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்கள் இதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்குமாறு அந்த விடியோவில் அவர் கூறியுள்ளார்.

அல்-கய்தா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி பேசியிருக்கும் 9 நிமிட விடியோ அல்-கய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மையை மத்திய புலனாய்வுத் துறையும் உறுதி செய்துள்ளது.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-கய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஸவாஹிரி, கர்நாடக கல்லூரியில் தன்னை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமெழுப்பிக் கொண்டே சூழ்ந்த கும்பலை, அல்லா அக்பர் என்று கோஷமெழுப்பிக் கொண்டே கடந்து சென்ற மாணவி முஸ்கான் கானை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

முஸ்கானை இந்தியாவின் உன்னத பெண் என்று குறிப்பிடும் அவர், அப்பெண் குறித்து தான் எழுதிய கவிதையையும் வாசித்துள்ளார்.

பிறகு, ஹிஜாப்பை தடை செய்யும் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள், மேற்குலக நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன என்றும் சாடியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டே ஸவாஹிரி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அவர் பேசிய சில விடியோக்கள் பிறகு வெளியானது. அவர் ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு பகுதியில் வாழந்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக அவர் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையை சாடி ஒரு விடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.