இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் கடந்த மார்ச்-24 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் பிணைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி தர வேண்டும் என்றதுடன் மீனவர்களை வருகிற மே-12 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.