எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 

நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

News image
இலங்கை செல்லும் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை 
Updated On :7 ஏப்ரல் 2022, 8:04 am

PTI


வாஷிங்டன்: இலங்கையில் தற்போது கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும், மருத்துவப் பொருள்களின் பற்றாக்குறையும் நிலவுவதால், நாட்டு மக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தீவு நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  கரோனா பெருந்தொற்று மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் அபாயமும் இருப்பதாக அமெரிக்கா தன் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டன் ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி இதுவாகும்.

பல மணி நேர மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் போன்றவற்றை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்து, புதிதாக 4 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. ஆனால், நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவளித்து வந்த கட்சிகள் சில தங்களது ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்ததும், காபந்து அரசில் பொறுப்பேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க முக்கிய எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்ட நிலையில், அங்கு பொருளாதார நிலைமையுடன், அரசியல் சூழ்நிலையும் படுமோசமாக மாறிவருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.