புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உக்ரைனுக்கு சென்ற போரிஸ் ஜான்சன்...ஸெலென்ஸ்கியுடன் ரகசிய ஆலோசனை 

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உக்ரைன் பயணம் தொடர்பான தகவல்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

News image

ஸெலென்ஸ்கியுடன் போரிஸ் ஜான்சன் சந்திப்பு

Updated On :10 ஏப்ரல் 2022, 7:38 am

DIN

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ஜி7 நாடுகளின் சேர்ந்த தலைவர் ஒருவர் உக்ரைன் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை.

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உக்ரைன் பயணம் தொடர்பான தகவல்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பாகப் பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "உக்ரைன் மக்களுடன் நாங்கள் என்றும் இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கப் பிரதமர் உக்ரைனுக்குச் சென்றுள்ளார்" என்றார்.

உக்ரைன் நாட்டில் இப்போது இருக்கும் நிலைமை குறித்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர், கீவ் வீதிகள் வழியாக இருவரும் நடந்து சென்றனர். அங்கு இருந்து மக்களுடன் போரிஸ் ஜான்சன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், "உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் உறுதியான தலைமை மற்றும் உக்ரேனிய மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன். ரஷியப் படைகள் உக்ரைன் வீரத்துடன் எதிர்கொள்கிறது. 

பிரிட்டன் அரசு உக்ரைன் மக்களுடன் நிற்கும் என்பதை இன்று தெளிவுபடுத்தினேன். பல காலமாகவே எங்கள் நிலைப்பாடு இதுவாகவே இருந்து வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் தொடரும்.

இந்த சோகத்தை முடிவுக்குக் கொண்டு வர உலகளாவிய கூட்டணியைக் கூட்ட முயல்கிறோம். மேலும் உக்ரைன் ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இருக்க உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

உக்ரைன் நாட்டிற்கு 770 யூரோ மில்லியன் பவுண்டுகள் உதவி செய்யப்படும் என அறிவித்தார். உக்ரைன் மக்கள் சிங்கத்தின் தைரியத்தை வெளிப்படுத்தினர். அதிபர் ஸெலென்ஸ்கி சிங்கத்தின் கர்ஜனை எப்படி இருக்கும் என்பதைக் காட்டினார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.