சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

போலந்தின் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 4 பேர் பலி

போலந்து நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2022, 1:12 pm

போலந்து நாட்டில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலந்து நாட்டின் பாவ்லோவிஸ்ஸில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் புதன்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது.  மதியம் 12 மணியளவில் 1000 மீட்டர் ஆழத்தில் மீத்தேன் வாயு வெளியேறிய நிலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வெடிவிபத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்தில் சிக்கிய 7 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.