உலகளவில் குறையும் கரோனா: உலக சுகாதார நிறுவனம்
பெர்லின்: உலகளவில் புதிய கரோனா தொற்றின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக குறைந்துள்ளதாகவும், மார்ச் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட ஐ.நா.சுகாதார நிறுவனம் வாராந்திர அறிக்கையில் கூறியதாவது:
ஏப்ரல் 11 முதல் 17 வரை 59 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 24% குறைவு என கூறப்பட்டுள்ளது.
கரோனாவால், ஒரு வார காலத்தில் 18 ஆயிரத்து 215 பேர் பலியாகி இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவு எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.