எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

நிதிக் கொள்கைகளை பலப்படுத்துங்கள்: இலங்கைக்கு பன்னாட்டு நிதியம் அறிவுரை

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நிதிக் கொள்கைகளை பலப்படுத்தி, வரியை அதிகரிக்குமாறு பன்னாட்டு நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

News image

நிதிக் கொள்கைகளை பலப்படுத்துங்கள்: இலங்கைக்கு பன்னாட்டு நிதியம் அறிவுரை

Updated On :26 ஏப்ரல் 2022, 9:23 am


கொழும்பு: பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க நிதிக் கொள்கைகளை பலப்படுத்தி, வரியை அதிகரிக்குமாறு பன்னாட்டு நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என நாடே பொருளாதார பின்னடைவால் கடும் பாதிப்புகளை சந்தித்துவருகிறது.

இந்த நிலையில், பன்னாட்டு நிதியத்துக்கான ஆசிய மற்றும் பசிபிக் துறை செயல் இயக்குநர் கூறியிருப்பதாவது, கடன்களை சமாளிக்கும் வகையில் தேவையான நிதி உதவி அளிப்பது உறுதி செய்யப்படும், பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் நிதிக் கொள்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கே ஆகியோர் பன்னாட்டு நிதியத்துடன் ஆலோசனை நடத்தி, நாட்டுக்கு நிதியுதவி செய்வதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்ததன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.