சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரான்ஸில் கடும் வறட்சி நிலவுகிறது: பிரதமர் எலிசபெத் போர்னே

பிரான்ஸ் நாட்டில் மிகவும் மோசமான வறட்சி நிலவுவதாக அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 3:56 pm

DIN

பிரான்ஸ் நாட்டில் மிகவும் மோசமான வறட்சி நிலவுவதாக அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் எலிசபெத் கூறியிருப்பதாவது: “ பிரான்ஸில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி அதிகரித்துள்ளது. இந்த கோடைக் காலம் தொடங்கியது முதல் இதுவரை மூன்று முறை வெப்ப அலை வீசியுள்ளது. நாம் இக்கட்டான சூழலில் இருக்கிறோம். நாட்டின் பல பகுதிகளிலும் நீர் இருப்பு குறைந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தக் கடும் வறட்சியினால் நமது நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.” என்றார்.

வானிலை அறிவிப்பில், பிரான்ஸில் இதே அளவில் வெப்பநிலை தொடர்ந்தாலோ அல்லது மேலும் அதிகரித்தாலோ வெயிலினால் ஆவியாகும் நீரின் அளவு அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விளை நிலங்களுக்கான நீர்ப்பாசனத்திற்கான நீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். இது நாட்டிலுள்ள தற்போது நிலவும் வறட்சியை மேலும் அதிகப்படுத்தும். அரசு வறட்சியினைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் அதிகம் கவனம் கொடுத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மழை பெய்யாத காரணத்தால் பிரான்ஸில் உள்ள 62 பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.