பெட்ரோல் விலை 52% உயா்வு: வங்கதேசத்தில் போராட்டம்
வங்கதேசத்தில் பெட்ரோல் விலை திடீரென 52 சதவீதம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.


வங்கதேசத்தில் பெட்ரோல் விலை திடீரென 52 சதவீதம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
அங்கு டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும் (ரூ.28.57) பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 டாக்காவும் ரூ.36.97) உயா்த்தப்படுவதாக அந்த நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. சா்வதேச சந்தை நிலவரம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது.
எனினும், இதுவரை இல்லாத வகையில் எரிபொருள் விலைகள் 52 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவா் அமைப்பினா் உள்ளிட்டோா் விலையுயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...