எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலால் அதிர்ச்சி அடைந்தேன்: அதிபர் ஜோ பைடன் 

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலால் அதிர்ச்சி அடைந்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார். 
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலால் அதிர்ச்சி அடைந்தேன்: அதிபர் ஜோ பைடன் 
Published on
Updated on
1 min read

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலால் அதிர்ச்சி அடைந்தேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்துள்ளார். 

மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4-ஆவது நாவல் ‘தி சடானிக் வோ்ஸஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, அவருக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அவரது தலைக்கு 3 மில்லியன் டாலா் விலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா். 

நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, மேடையில் மா்ம நபரால் கத்தியால் தாக்கப்பட்டாா். இதுக்குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: 

நேற்று நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது நடந்த கொடூரமான தாக்குதலை அறிந்து நானும் ஜில்லும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தோம். அனைத்து அமெரிக்கர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து, அவரது உடல்நலம் மற்றும் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். முதலில் ருஷ்டிக்கு உதவுவதற்கும், தாக்குதல் நடத்தியவரை அடக்குவதற்கும் நடவடிக்கையில் இறங்கிய துணிச்சலான நபர்களுக்கும் நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

பயமின்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் திறன். எந்தவொரு சுதந்திரமான மற்றும் திறந்த சமூகத்தின் தூண்கள் போன்றவை. அமெரிக்காவின் மதிப்புகளுக்கான ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்காக நிற்கும் அனைவருக்கும் எங்களது உறுதிப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com