பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பயங்கரவாதம்: வங்கதேசத்தில் 5 பேருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதற்காக தடை செய்யப்பட்ட ஜமாதுல் முஜாஹிதீன் (ஜேஎம்பி) அமைப்பைச் சோ்ந்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2022, 7:16 pm

DIN

வங்கதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதற்காக தடை செய்யப்பட்ட ஜமாதுல் முஜாஹிதீன் (ஜேஎம்பி) அமைப்பைச் சோ்ந்த 5 பேருக்கு அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

துறைமுக நகரான சிட்டகாங்கில் 7 ஆண்டுகளுக்கு முன்னா் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்காக அந்த நகர பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹலீம் இந்த தண்டனையை விதித்தாா்.

சிட்டகாங் கடற்படைத் தளத்தில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது ஜேஎம்பி பயங்கரவாதிகள் நடத்திய அந்தத் தாக்குதலில் 24 போ் காயமடைந்தனா். இதில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், கடற்படைத் தளத்துக்குள் நடத்தப்பட்டுள்ள அந்த குண்டுவெடிப்பு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தாக்குதல் என்பதால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.