நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜப்பான் பிரதமருக்கு கரோனா 

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 11:47 am

DIN

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை இரவு லேசான அறிகுறி இருந்ததால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 65 வயதான ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றிலிருந்து குணமடைய அவரது அதிகாரப்பூரவமான இல்லத்தில் ஓய்வு பெற்று வருகிறார்.

ஜப்பானில் சனிக்கிழமை மட்டும் புதியதாக  253265 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. தொடர்ந்து 3வது நாளாக 2,50,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது. 7வது அலை கரோனா தலைவிரித்து ஆடுகிறது ஜப்பானில். கடந்த சில நாட்களில் மட்டும் 254 மரணங்கள் இதில் அடங்கும். ஆக. 12 முதல் 100 குழதைகள் மற்றும் சிறுவர் பள்ளிகளை மூட ஜப்பான் அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.