/

பாகிஸ்தான்: 1,100-ஐ நெருங்கிய மழை, வெள்ள பலி எண்ணிக்கை

பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,100-ஐ நெருங்கியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:11 am

DIN

பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,100-ஐ நெருங்கியது.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 1,061 போ் உயிரிழந்துள்ளனா்; 1,575 போ் காயமடைந்துள்ளனா். 9,92,871 வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, லட்சக்கணக்கானவா்கள் தங்குமிடம், உணவு, குடிநீா் இல்லாமல் தவித்து வருகின்றனா்.

இந்த கனமழைக்கு 7,19,558 கால்நடைகள் பலியாகியுள்ளன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.