மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிக மழை: மிஸ்ஸிஸிப்பியில் தண்ணீருக்குப் பஞ்சம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 10:07 am

DIN

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிக மழைப்பொழிவு காரணமாக அங்குள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. ஜாக்சன் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாகாண ஆளுநர் டேட் ரீவ்ஸ் அறிவித்துள்ளார். 

மிஸ்ஸிஸிப்பியில் 1.5 லட்சம் குடியிருப்பாளர்கள் உள்ள நிலையில் குடிநீர் மற்றும் இதரப் பயன்பாட்டுக்கான தண்ணீர் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் மக்கள் இந்த நிலையை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

'இபோது இருக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல, பல் துலக்குவதற்குக்கூட பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் அதில் போதுமான குளோரினேஷன் இல்லை மற்றும் தண்ணீரில் உள்ள கிருமி நீக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ள மாகாண சுகாதாரத்துறை அதிகாரி விரைவில் நிலைமையை சரிசெய்வோம் என்று தெரிவித்துள்ளார். 

கனமழையால் ஜாக்சன் பகுதியில் சுமார் 100 முதல் 150 கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கணித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.