டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினருடன் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க.. குஜராத்தில் காங்கிரஸ் அடைந்தது தோல்வியே அல்ல! அதற்கும் மேல்
கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், ஷேக் ஹசீனா ஒரு வாக்குத் திருடன் என்றும் கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.
வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைமை அலுவலகத்தை பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் வங்கதேசத்தில் பதற்ற நிலை உருவானது.