மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காங்கோ: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100 போ் பலி

காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமாா் 100 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2022, 7:56 pm

DIN

காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமாா் 100 போ் உயிரிழந்தனா்.

காங்கோ தலைநகா் கின்ஷாசாவில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் அந்நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமாா் 100 போ் பலியாகினா். அங்கிருக்கும் கலிமா பகுதியில் மட்டும் 35-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்று அப்பகுதி மேயா் தெரிவித்தாா். சடலங்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெறுவதாக அந்நாட்டு பிரதமா் ஜான் மிஷெல் சமா லுகோண்டே தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.