புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஜப்பானில் இன்று முதல் சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா சோதனை

சீனாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறையை ஜப்பான் இன்று முதல் தொடங்கியிருக்கிறது.

News image
ஜப்பானில் இன்று முதல் சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா சோதனை
Updated On :30 டிசம்பர் 2022, 10:49 am

DIN

சீனாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறையை ஜப்பான் இன்று முதல் தொடங்கியிருக்கிறது.

ஏற்கனவே, சீனத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையிலும், ஜப்பானிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதன் பின்னணியிலும், இன்று முதல் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மட்டும் ஜப்பானில் கரோனாவுக்கு 420 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது கூட 300 பேர் வரை தான் மரணத்தைத் தழுவிய நிலையில், தற்போது ஜப்பானில் இந்த அளவுக்கு மரண சம்பவங்கள் அதிகரித்திருப்பது அந்நாட்டை கலங்க வைத்திருக்கிறது.

தற்போதைய மரண சம்பவங்களுக்கு உண்மையில் என்னதான் காரணம் என்பது தெரியப்படவில்லை என்றும், வயதானவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகளவில் இருப்பதும் மரணங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகக் கருதப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாங்கள் விதித்துள்ள கடுமையான நோய்க்கட்டுப்பாடுகளை  அண்மையில் தளா்த்திய சீனா, தங்கள் நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை திடீரென நீக்கியது.

சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய துணை ரகம் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், இதனால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து கரோனாவுக்கு ஏராளமானவா்கள் பலியாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில் சீன எல்லைகள் திறந்துவிடப்பட்டதையடுத்து, அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகள் கட்டாய கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று இந்தியா, இத்தாலி, தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. பிறகு அந்தப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இந்த நிலையில்தான், ஜப்பானும், சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.