உலகில் மொத்தம் 41 கோடி பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் அடிப்படையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி,
உலகில் மொத்தம் 41,22,75,800 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 58,34,575 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 73,51,6,545 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 87,023 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 7,93,25,576 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 9,43,411 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியாவும் பிரேசிலும் உள்ளன.
இந்தியாவில் 4,66,5,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,09,043 பேர் பலியாகியுள்ளனர். பிரேசிலில் 2,74,83,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 6,38,449 ஆக உள்ளது.