காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிரேசிலில் கனமழை: 23 பேர் பலி

பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் கனமழை மற்றும் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 7:36 am

DIN

பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் கனமழை மற்றும் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர். 

கடந்த சில நாட்களாக பிரேசிலில் கனமழை பெய்துவருவதால், பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். கனமழைக்கு 23 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவின் வடக்கே பெட்ரோபோலிஸ் நகரில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்ட பிரேசில் குடியரசுத் தலைவர் ஜெயிர் போல்சனாரோ, பெட்ரோபோலிஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.