பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

'மனிதநேயத்தின் அடிப்படையில் படைகளைத் திரும்பப்பெற வேண்டும்' - புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று புதினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:07 am

DIN

மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று புதினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்ற சூழல் நிலவுகிறது. 

ரஷியா - உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ரஷியா, தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேயத்தின் அடிப்படையில் உக்ரைனில் உள்ள ரஷியப் படைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறிய அவர், இந்த மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.