உக்ரைனில் இருந்து 1.5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்: ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்
உக்ரைன் மீது ரஷியப் படைகள் நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.










