ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தடுப்பூசி கட்டாயம்: ஆஸ்திரியா திட்டம்

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:54 pm

DIN

ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என கடந்த இரு மாதங்களுக்கு முன் உத்தேச திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசு தீா்மானித்துள்ளது.

மசோதா சட்ட வடிவம் பெற்ற பின்னா், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது காவல் துறையினா் சோதனை செய்வாா்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும். அதன்பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதையும் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.