ரஷியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு கரோனா தடுப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,24,070 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 9,090 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், ஒரேநாளில் 621 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் 30,130 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றியிலிருந்து குணமடைந்துள்ளனர்.