சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஷின்சோ இறப்புக்கு இதுதான் காரணம்: சிகிச்சையளித்த மருத்துவர்கள் விளக்கம்

ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :8 ஜூலை 2022, 3:42 pm

DIN

ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,  அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இறப்பிற்கு என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “ முன்னாள் பிரதமர் அபேவின் உடலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒரு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்துள்ளது. அதனால், அவருக்கு அதிக அளவிலான ரத்தப் போக்கு ஏற்பட்டது. சிகிச்சையின் போது ரத்தப் போக்கினை நிறுத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அதன் காரணத்தினாலேயே அவர் உயிரிழந்தார்.” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.